Skip to main content

ஆசிரியர் தகுதித் தேர்வு, வங்கி பணிக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம்'


மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் வங்கி பணிக்கு விண்ணப்பித்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து. நாகேந்தி
ரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய கல்வி வாரிய ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக்கான தேர்வு ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்துள்ள 
விண்ணப்பதாரர்கள் தேர்வில் வெற்றி பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே, இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ள விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா