சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசு தொழிற்பயிற்சி மையம் துவக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். கைவினை பொருட்கள் பயிற்சி மைய இணை இயக்குனர் ராஜ்குமா
ர் முன்னிலை வகித்தார். அமைச்சர் மோகன், அரசு தொழிற் பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் காமராஜ் எம்.பி., அழகுவேலுபாபு எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் தேன்மொழி குணசேகரன், பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ராமசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். பயிற்சி மையத்தில் முதல்வர் ஆறுமுகம் நன்றி கூறினார்.