Skip to main content

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி


தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின், தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான குறுகிய கால தொழில் நுட்ப திறன் பயிற்சிகளை பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மூலமாக வழங்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கொங்கு பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் சி.குமாரசா
மி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எலக்ட்ரிக்கல் ஒயரிங் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பார்த்தல், எலக்ட்ரிக்கல் ஒயரிங் மற்றும் மோட்டார் ரீவைண்டிங் ஆகிய பயிற்சிகள் வழங்க திட்டமிட்டுள்ளது. முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சிகள், தினசரி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும்.
பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு, அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பை பெறும் வகையில், சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இப்பயிற்சிகளில் 8-ஆம் வகுப்பும், அதற்கு மேல் தேர்ச்சிப் பெற்றவர்கள் சேர்ந்து பயன் பெறலாம். இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்களின் வயது வரம்பு 18 முதல் 45-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், தங்களது அசல் கல்விச் சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்கள் கொண்டு வர வேண்டும்.
மேலும் இப்பயிற்சியில் சேர இச்சான்றுகளின் 2 நகல்களுடன் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை (ஜன.21) வரை, பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் வழங்கப்படும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா