Skip to main content

ஆர்.டி.ஐ., சட்டத்தில் பிற விவரங்களையும் பெறலாம்

ஆர்.டி.ஐ., சட்டத்தில் பிற விவரங்களையும் பெறலாம் - டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ.,) மூலம், நேரடி தகவல் மட்டுமின்றி, அது சார்ந்த இணைப்பு விவரங்களை யும் பெறலாம் என, டில்லி ஐகோ
ர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆர்.டி.ஐ.,ன் கீழ், ஊழல் வழக்கு தொடர்பாக, டில்லி நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (சி.பி.ஐ.,) இடையிலான தகவல் பரிமாற்ற விவரங்களை வழங்க, ஒருவர் கோரியிருந்தார். ஆர்.டி.ஐ., சட்டத்தில் இருந்து சி.பி.ஐ.,க்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாலும், அத்தகவல் வழக்கு விசாரணையை பாதிக்கும் என்பதாலும், அது தொடர்பான விவரங்களை வழங்க இயலாது என, தலைமை தகவல் ஆணையம் தெரிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட் நீதிபதி விபு பக்ரூ, ''ஆர்.டி.ஐ., சட்டம் 8 (1) (எச்) பிரிவின் கீழ், உரிய காரண மின்றி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க கூடாது,'' என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

இவ்வழக்கில், மனுதாரருக்கு நிராகரிப்பிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மேலும், அந்த ஆவணங்கள், எந்த வகையில் வழக்கு விசாரணையை பாதிக்கும் என்பதையும் எடுத்துக் கூறவில்லை. ஆர்.டி.ஐ., சட்டப் பிரிவு 24ன் படி, தகவல் தர விலக்களிக்கப்பட்ட அமைப்புகளுக்கு கூட, ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், இந்த சட்டத்தை காட்டி, பல அமைப்புகள் தகவல் தர மறுக்கின்றன. வழங்கப்படும் விவரங்கள் வழக்கு விசாரணையை பாதிக்கும் என, வெறும் அனுமானத்தின் அடிப்படையில் கூறக்கூடாது. இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்