Skip to main content

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இலவச பொறியியல் பட்டப் படிப்பு

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இலவச பொறியியல் பட்டப் படிப்பு: வேந்தர் தகவல்
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2015-16-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான ஒருங்கினைந்த நுழைவுத் தேர்வில் முதல் 25 ஆயிரம்
தரத்திற்குள் வரும் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று வேந்தர் க.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் வேந்தர் க.ஸ்ரீதரன் கூறியதாவது: 
2015-16-ம் ஆண்டிற்கான முதலாண்டு பொறியியல் பட்டப் படிப்பிற்காக ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஒருங்கிணந்த நுழைவுத் தேர்விற்கான மாதிரித் தேர்வு கலசலிங்கம் பல்கலைக்கழகம், திருச்சி மற்றும் தேனியில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கு ஏப்ரல் 2015-ல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில், அகில இந்திய அளவில் முதல் 25 ஆயிரம் இடங்களைப் பெறும் மாணவ மாணவியருக்கு முதலாண்டு பி.டெக். படிப்பிற்கு கட்டணம் கிடையாது. மேலும் விடுதிக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களும் கிடையாது. முழு இலவசக் கல்வி வழங்கப்படும்.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தரத்திற்குள் வரும் மாணவ மாணவியருக்கு முதலாண்டு பொறியியல் பட்டப் படிப்பில் கல்விக் கட்டணம் மட்டும் கிடையாது. 

இந்த சலுகைகளைப் பெற்றுப் பொறியியல் படிப்பில் படிக்கும் மாணவர்கள், அவர்களுடைய கல்வியில் நல்ல தரத்தினை தொடர்ந்து பின்வரும் ஆண்டுகளில் பெற்றால், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணமும் கிடையாது.

ஏழை மாணவர்கள் உயர் கல்வியை தடையின்றி பெற்று நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் தொண்டாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு 98843-77269, 95008-06564 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு