Skip to main content

மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு

மதுரையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த முதன்மை கல்வி அலுவலர்ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலாண்டை விட
அரையாண்டு தேர்வில் மாணவர் தேர்ச்சி விகிதம், மதிப்பெண் அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள்கற்பித்தல் பணியும் குறிப்பிடும் வகையில் இருந்தது. இச்சூழலில் தேர்ச்சியைமேலும் அதிகரிக்க பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, மாலை என இரு முறை சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதில் மாணவர்களுக்கு தேவையான திட்டம் தயாரிக்க ஆசிரியர்கள் முன்வரவேண்டும்.

மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்ப குழுக்களாக பிரித்து கற்பிக்கப்படும்.எளிய வழிமுறைகள் தேர்ச்சி பெறும் ஆலோசனைகளும் அவர்களுக்கு வழங்கப்படும். உதவிபெறும் பள்ளிகளில் தேர்ச்சியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா