Skip to main content

மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு

மதுரையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த முதன்மை கல்வி அலுவலர்ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலாண்டை விட
அரையாண்டு தேர்வில் மாணவர் தேர்ச்சி விகிதம், மதிப்பெண் அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள்கற்பித்தல் பணியும் குறிப்பிடும் வகையில் இருந்தது. இச்சூழலில் தேர்ச்சியைமேலும் அதிகரிக்க பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, மாலை என இரு முறை சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதில் மாணவர்களுக்கு தேவையான திட்டம் தயாரிக்க ஆசிரியர்கள் முன்வரவேண்டும்.

மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்ப குழுக்களாக பிரித்து கற்பிக்கப்படும்.எளிய வழிமுறைகள் தேர்ச்சி பெறும் ஆலோசனைகளும் அவர்களுக்கு வழங்கப்படும். உதவிபெறும் பள்ளிகளில் தேர்ச்சியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்