Skip to main content

வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

புதுடெல்லி:வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியை 0.25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு, கச்சா எண்ணெய் வி
லை சரிவு ஆகியவற்றின் காரணமாக வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டியை (ரெப்போ) 0.25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இருப்பினும், வங்கிகளின் கையிருப்பு தொகையில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி குறைப்புக் காரணமாக, வங்கிகளில் வாங்கப்படும் வீட்டு கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதேநேரத்தில், வட்டி குறைப்பு காரணமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 46 பைசா உயர்ந்து 61.72 ரூபாயாக உள்ளது.இதேபோல், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் மதிப்பு 600 புள்ளிகள் அதிகரித்து 27,947.59 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 176.05 புள்ளிகள் அதிகரித்து 8,453.60 புள்ளிகளாக உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா