மங்கள்யான் திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு சிறந்த விண்வெளி முன்னோடி விருது:அமெரிக்கா அறிவிப்பு
மங்கள்யான் திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு சிறந்த விண்வெளி முன்னோடி விருது:அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தில் 450 கோடி ரூபாய்
செலவில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்த மங்கள்யான் விண்கலம் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக இலக்கை சென்றடைந்து சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம், விண்வெளிப் பயண வரலாற்றில் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு வெற்றிகரமாக விண்கலத்தை ஏவிய முதல் நாடு என்ற பெருமைக்குரிய சிறப்பிடத்தை இந்தியா பிடித்துள்ளது.
இந்த அரிய சாதனையை அங்கீகரித்து, கவுரவிக்கும் விதமாக 2015ம் ஆண்டின் விண்வெளி முன்னோடி விருதை இஸ்ரோவுக்கு வழங்குவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘என்.எஸ்.எஸ்.’ இன்று அறிவித்துள்ளது.
மங்கள்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய குழுவினருக்கு அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவின் கீழ் இவ்விருது வழங்கப்படுவதாக அறிவித்துள்ள ‘என்.எஸ்.எஸ்.’ செய்திக் குறிப்பு, வரும் மே மாதம் 20-24 தேதிகளில் கனடா தலைநகர் டோரான்ட்டோவில் நடைபெறும் 34-வது சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டின்போது இஸ்ரோவுக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.