Skip to main content

மங்கள்யான் திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு சிறந்த விண்வெளி முன்னோடி விருது

மங்கள்யான் திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு சிறந்த விண்வெளி முன்னோடி விருது:அமெரிக்கா அறிவிப்பு

மங்கள்யான் திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு சிறந்த விண்வெளி முன்னோடி விருது:அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தில் 450 கோடி ரூபாய்
செலவில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்த மங்கள்யான் விண்கலம் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக இலக்கை சென்றடைந்து சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம், விண்வெளிப் பயண வரலாற்றில் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு வெற்றிகரமாக விண்கலத்தை ஏவிய முதல் நாடு என்ற பெருமைக்குரிய சிறப்பிடத்தை இந்தியா பிடித்துள்ளது.

இந்த அரிய சாதனையை அங்கீகரித்து, கவுரவிக்கும் விதமாக 2015ம் ஆண்டின் விண்வெளி முன்னோடி விருதை இஸ்ரோவுக்கு வழங்குவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘என்.எஸ்.எஸ்.’ இன்று அறிவித்துள்ளது.

மங்கள்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய குழுவினருக்கு அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவின் கீழ் இவ்விருது வழங்கப்படுவதாக அறிவித்துள்ள ‘என்.எஸ்.எஸ்.’ செய்திக் குறிப்பு, வரும் மே மாதம் 20-24 தேதிகளில் கனடா தலைநகர் டோரான்ட்டோவில் நடைபெறும் 34-வது சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டின்போது இஸ்ரோவுக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு