Skip to main content

தமிழக கால்பந்து அணித் தலைவராக கோத்தகிரி பள்ளி மாணவர் தேர்வு


தமிழக கால்பந்து அணித் தலைவராக கோத்தகிரி பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக கால்பந்து அணி தலைவருக்கான, இந்திய அரசால் நடத்தப்பட்ட (எஸ்.ஜி.எஃப்) எனப்படும் பள்ளி மாணவர்களுக்கான தேர்வில் கோத்தகிரி கிரீன்வேலி மெட்ரிக் பள்ளி மாணவர் எஸ்.கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்
.
இதைத்தொடர்ந்து, பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான கால்பந்துப் போட்டி கடந்த வாரம் மகாராஷ்ட்ரா, உத்தரகாண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரசேதம் ஆகிய பகுதிகளில் கார்த்திக் தலைமையில் தமிழக பள்ளி மாணவர்கள் விளையாடினர். இதில், தமிழக அணி கோப்பையை வென்றது.
கோப்பை பெற்று தந்த கார்த்திக்கு, பள்ளித் தாளாளர் பிரசாத் கிருஷ்ணன், பள்ளி முதல்வர் கங்காதரன் உள்பட ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு