தமிழக கால்பந்து அணித் தலைவராக கோத்தகிரி பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக கால்பந்து அணி தலைவருக்கான, இந்திய அரசால் நடத்தப்பட்ட (எஸ்.ஜி.எஃப்) எனப்படும் பள்ளி மாணவர்களுக்கான தேர்வில் கோத்தகிரி கிரீன்வேலி மெட்ரிக் பள்ளி மாணவர் எஸ்.கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்
.
இதைத்தொடர்ந்து, பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான கால்பந்துப் போட்டி கடந்த வாரம் மகாராஷ்ட்ரா, உத்தரகாண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரசேதம் ஆகிய பகுதிகளில் கார்த்திக் தலைமையில் தமிழக பள்ளி மாணவர்கள் விளையாடினர். இதில், தமிழக அணி கோப்பையை வென்றது.
கோப்பை பெற்று தந்த கார்த்திக்கு, பள்ளித் தாளாளர் பிரசாத் கிருஷ்ணன், பள்ளி முதல்வர் கங்காதரன் உள்பட ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.