Skip to main content

சான்றிதழ் சரிபார்ப்பில் நிராகரிக்கப்பட்டவருக்கு தமிழாசிரியர் பணி வழங்க உத்தரவு

சான்றிதழ் சரிபார்ப்பில் நிராகரிக்கப்பட்டவருக்கு தமிழாசிரியர் பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
முதுகலை தமிழியல் படித்தவருக்கு தமிழாசிரியர் பணி வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கி
ளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் மனுதாரர் ஜி. கலைவேந்தன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திர பாபு பிறப்பித்த உத்தரவு விவரம்: மனுதாரர் கலைவேந்தன் பி.லிட் (தமிழ்), எம்.ஏ. தமிழியல் மற்றும் பி.எட். முடித்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலைத் தமிழாசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர், 2012 செப்டம்பர் 27இல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டு, அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பித்துள்ளார். அப்போது, எம்.ஏ. தமிழியல் படிப்பு, எம்.ஏ. தமிழ் படிப்புக்கு இணையானது அல்ல எனக் குறிப்பிட்டு, அவரைத் தேர்வு பட்டியலில் இருந்து ஆசிரியர் தேர்வு வாரியம் நீக்கியுள்ளது.
இதற்கிடையே, மனுதாரர் படித்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு எம்.ஏ. தமிழ் என திருத்தி புதிய சான்றிதழ் வழங்கியுள்ளது. இருப்பினும், அதை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஒரு இடத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும், பதில் மனு தாக்கல் செய்யவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்வு வாரியம் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், தஞ்சை பல்கலைக்கழகம் வழங்கியுள்ள சான்றிதழ் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
மனுதாரர் முதுகலை தமிழ் முடித்திருக்கிறார் என்பதற்கான சான்றிதழை பல்கலைக்கழகம் திருத்தி வழங்கியுள்ளது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் 4 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு