Skip to main content

பிப்.9-இல் பிரதேச ராணுவப் படைக்கு ஆள் தேர்வு


கோவையில் உள்ள 110-வது பிரதேச ராணுவப் படைக்கு பிப்ரவரி 9-ம் தேதி ஆள் தேர்வு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் அரசு வேலை, சுய தொழில் செய்பவர்கள், தனியார்
நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், முன்னாள் தேசிய படை மாணவர்கள், துப்பாக்கி சுடுவதில் தேர்ச்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்களது நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட மறுப்பின்மை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் குறைந்த பட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 42 வயது வரையும், உயரம் 160 செ.மீட்டரும் அதற்கு மேலும், மார்பளவு 77 செ.மீட்டரும், எடை 50 கிலோ இருக்க வேண்டும்.
 கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும் ஆள்தேர்வு முகாமில் கலந்து கொள்பவர்கள் மூன்று புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் வரவேண்டும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா