Skip to main content

பிப்.9-இல் பிரதேச ராணுவப் படைக்கு ஆள் தேர்வு


கோவையில் உள்ள 110-வது பிரதேச ராணுவப் படைக்கு பிப்ரவரி 9-ம் தேதி ஆள் தேர்வு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் அரசு வேலை, சுய தொழில் செய்பவர்கள், தனியார்
நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், முன்னாள் தேசிய படை மாணவர்கள், துப்பாக்கி சுடுவதில் தேர்ச்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்களது நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட மறுப்பின்மை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் குறைந்த பட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 42 வயது வரையும், உயரம் 160 செ.மீட்டரும் அதற்கு மேலும், மார்பளவு 77 செ.மீட்டரும், எடை 50 கிலோ இருக்க வேண்டும்.
 கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும் ஆள்தேர்வு முகாமில் கலந்து கொள்பவர்கள் மூன்று புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் வரவேண்டும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன