Skip to main content

81 சதவீத மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் தெரியல! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்


தமிழகத்தில், கிராமப்பகுதிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், 81 சதவீதத்தினருக்கு அடிப்படை கணித திறன் இல்லை என்று ஆய்வுகளின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

'ஏசர்' அமைப்பின் சார்பில், தமிழகத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு
வரை படிக்கும், கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் குறித்து ஆய்வு
செய்யப்பட்டது. இதன் படி, தமிழ் பாடத்தை பொறுத்தவரையில், எழுத்து, வார்த்தை, வாக்கியம், பத்தி என வாசிப்பு திறன் கொண்ட மாணவர்களை தனித்தனியாக ஆய்வு செய்துள்ளனர். இதில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின், 64 சதவீத பேருக்கு தமிழ் வாசிப்பு திறனும், 71 சதவீத மாணவர்களுக்கு ஆங்கில வாசிப்புத்திறனும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கணித பாடத்தில், 81 சதவீத மாணவர்களுக்கு எளிமையான வகுத்தல் கணக்குகளும், 75 சதவீத மாணவர்களுக்கு கழித்தலும், செய்வதற்கு தெரியவில்லை.

கல்வியாளர் பாரதி கூறுகையில், ''கிராமப்புற மாணவர்களின் அடிப்படை கல்வித்தரம் மிகவும் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை மற்றும் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி கல்வித்தரத்தை பாதிக்கின்றது. இப்பாதிப்பு, பொதுத்தேர்வுகளிலும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிராமப்புற மாணவர்களை பின்னுக்கு தள்ளுகிறது,'' என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்