Skip to main content

ரயில்வே பணிக்கான தேர்வு: மதுரையில் 71 சதவீதம் பேர் எழுதவில்லை


ரயில்வே பணிக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுக்கு, மதுரையில் விண்ணப்பித்தவர்களில் 71 சதவீதம் பேர் எழுதவில்லை.
ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் சிறப்பு நிலை பழகுநர் (அப்ரன்ட்டி
ஸ்) பணிநிலையில், 42 காலியிடங்களுக்காக ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் 41 மையங்களில் இத் தேர்வு நடைபெற்றது.
மதுரையில் மீனாட்சி அரசினர் கலைக் கல்லூரி, டான் பாஸ்கோ பாலிடெக்னிக், சேதுபதி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மதுரை மையத்துக்கு 1207 பேர் விண்ணப்பித்திருந்தனர். பொதுத் திறன் அறிதல், இயற்பியல் மற்றும் வேதியியல், கணிதம் என மூன்று தேர்வுகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், பொதுத் திறன் அறிதல் மற்றும் கணிதத் தேர்வை 346 பேர் மட்டுமே எழுதினர். இயற்பியல் மற்றும் வேதியியல் தேர்வை 348 பேர் எழுதினர்.
விண்ணப்பித்தவர்களில் 71 சதவீதம் பேர் தேர்வுக்கு வரவில்லை. கலால் துறை உதவி இயக்குநர் லில்லிபாய் தலைமையில், வருவாய்த் துறை அலுவலர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன