ரயில்வே பணிக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுக்கு, மதுரையில் விண்ணப்பித்தவர்களில் 71 சதவீதம் பேர் எழுதவில்லை.
ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் சிறப்பு நிலை பழகுநர் (அப்ரன்ட்டி
ஸ்) பணிநிலையில், 42 காலியிடங்களுக்காக ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் 41 மையங்களில் இத் தேர்வு நடைபெற்றது.
மதுரையில் மீனாட்சி அரசினர் கலைக் கல்லூரி, டான் பாஸ்கோ பாலிடெக்னிக், சேதுபதி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மதுரை மையத்துக்கு 1207 பேர் விண்ணப்பித்திருந்தனர். பொதுத் திறன் அறிதல், இயற்பியல் மற்றும் வேதியியல், கணிதம் என மூன்று தேர்வுகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், பொதுத் திறன் அறிதல் மற்றும் கணிதத் தேர்வை 346 பேர் மட்டுமே எழுதினர். இயற்பியல் மற்றும் வேதியியல் தேர்வை 348 பேர் எழுதினர்.
விண்ணப்பித்தவர்களில் 71 சதவீதம் பேர் தேர்வுக்கு வரவில்லை. கலால் துறை உதவி இயக்குநர் லில்லிபாய் தலைமையில், வருவாய்த் துறை அலுவலர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.