Skip to main content

மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: கல்வித்துறை கண்டிப்பு


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என, தலைமை ஆசிரியர்களை, கல்வித்துறை கண்டித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு
* அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, பொதுத் தேர்வி
ல் வெற்றிபெற செய்வதே நம் நோக்கம். பத்தாம் வகுப்பு மாணவர்களை, காலை 8:00 மணிக்கு பள்ளிக்கு வரவழைத்து, குறிப்பிட்ட ஆசிரியர்களைக் கொண்டு அமைதியாக படிக்கச் செய்ய வேண்டும்.
* திறமையான மாணவர் தலைமையில் நடுநிலை, கடைநிலை மாணவரும் இடம்பெறும் வகையில், குழு பிரிக்க வேண்டும். அந்த குழுவுக்கு, தினமும் படிக்க வேண்டிய பகுதிகளை பாட ஆசிரியர் பிரித்து தர வேண்டும்.
* சிறு வினா, குறுவினா, பெருவினா, மனப்பாட பகுதிகளை ஒப்புவித்து, பின் எழுதி காட்டச் செய்து ஆசிரியர் திருத்த வேண்டும்.
* எந்தக் காரணத்தை முன்னிட்டும், பள்ளி வளாகத்தில் மாலை 6:00 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. உரிய நேரத்தில் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, இயக்குனர் கூறியுள்ளார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன