Skip to main content

பூமியை போன்று 5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு

பூமியை போன்று 5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண் வெளியில் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டு பிடிக்க அமெரிக்காவின் நாசா மையம் கெப்ல
ர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் உள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் புதிய சூரிய மண்டலம் கண்டு பிடித்தது. அது குறித்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதையடுத்து, அந்த மண்டலத்தில் சூரியன் போன்று புதிய நட்சத்திரம் உள்ளது. அதற்கு கெப்லர் 444 என பெயரிட்டுள்ளனர்.

அதைச்சுற்றி பூமியை போன்று 5 புதிய கிரகங்கள் உள்ளன. அவை புதன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு இடையே அமைந்துள்ளன. புதிய சூரிய மண்டலம் 112 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. அது விண்வெளியில் இருக்கும் மிகப் பழமை வாய்ந்த கிரகங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு