Skip to main content

பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் 4 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்


பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நான்கு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணி
யமர்த்த மையம், இன்போஸிஸ் பி.பி.எஸ். நிறுவனம் இணைந்து பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் பயின்று நிகழாண்டில் (2015) தேர்ச்சி பெறவுள்ள மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.
வரும் ஜனவரி 27-ஆம் தேதி திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியிலும், 28-ஆம் தேதி ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரியிலும், 30-ஆம் தேதி சேலம் ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியிலும், 31-ஆம் தேதி பெரியார் பல்கலைக்கழக வளாகத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.சி.ஏ., பி.எஸ்சி., ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடத்தை பயின்றிருக்க வேண்டும். தேர்ச்சி விகிதம் 50 சதத்துக்கு மேல் இருக்க வேண்டும். பாடங்கள் ஏதும் நிலுவையில் (அரியர்ஸ்) இருக்கக்கூடாது.
வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.1.5 லட்சம் ஆண்டு சம்பளமாக வழங்கப்படும். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் அருகில் உள்ள கல்லூரி மையத்தில் வேலைவாய்ப்பு அலுவலர் மூலமாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முகாமிற்கு வரும் போது கல்லூரி அடையாள அட்டை, தன் விவரப்பட்டியலை கொண்டு வர வேண்டும்.
இன்போஸிஸ் நிறுவனமுள்ள எந்தப் பகுதியிலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்து கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர், பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணியமர்த்த மைய இயக்குநர் பேராசிரியர் ஆர்.வெங்கடாசலபதியை அலுவலக நேரத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு