Skip to main content

3,5,8, வகுப்பு மாணவர்களுக்குஅடைவுத்தேர்வு வரும் 20ல் துவக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசுப்பள்ளி 3, 5 மற்றும் 8ம் வகுப்புமாணவர்களுக்கான அடைவு ஆய்வுத் தேர்வு 20ம் தேதி துவங்குவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்களின் கல்வித்தரம் குறித்து ஆய்வுநடத்தி மதிப்பீடு செய்வதற்கு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் அடைவு ஆய்வுத்தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கு 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான அடைவு தேர்வுதேதிகளை கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்புஅடைவு ஆய்வு தேர்வுகள் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது.இதன் அடிப்படையில், 3 மற்றும் 5வகுப்பு மாணவர்களுக்கு 20ம் தேதி காலை 10.00 மணி முதல் 12.00 மணி, தமிழ் மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை கணிதம், ஆங்கிலம், 21ம்தேதி காலை 10.00 மணி முதல் 12.00 வரை. தொடர்ந்து, 8ம்வகுப்பு மாணவர்களுக்கு 22ம் தேதி தமிழ் காலை 10.00 -12.00 மணி வரை, கணிதம், 2.00-4.00 மணி வரை மற்றும் 23ம் தேதி, ஆங்கிலம், காலை 10.00-12.00 மணி, அறிவியல், 2.00- 4.00 மணி வரை நடக்கிறது. தேர்வறை கண்காணிப்பாளர்கள் தேர்வு இறுதியில் அனைத்து விபரங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன