Skip to main content

3,5,8, வகுப்பு மாணவர்களுக்குஅடைவுத்தேர்வு வரும் 20ல் துவக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசுப்பள்ளி 3, 5 மற்றும் 8ம் வகுப்புமாணவர்களுக்கான அடைவு ஆய்வுத் தேர்வு 20ம் தேதி துவங்குவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்களின் கல்வித்தரம் குறித்து ஆய்வுநடத்தி மதிப்பீடு செய்வதற்கு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் அடைவு ஆய்வுத்தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கு 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான அடைவு தேர்வுதேதிகளை கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்புஅடைவு ஆய்வு தேர்வுகள் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது.இதன் அடிப்படையில், 3 மற்றும் 5வகுப்பு மாணவர்களுக்கு 20ம் தேதி காலை 10.00 மணி முதல் 12.00 மணி, தமிழ் மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை கணிதம், ஆங்கிலம், 21ம்தேதி காலை 10.00 மணி முதல் 12.00 வரை. தொடர்ந்து, 8ம்வகுப்பு மாணவர்களுக்கு 22ம் தேதி தமிழ் காலை 10.00 -12.00 மணி வரை, கணிதம், 2.00-4.00 மணி வரை மற்றும் 23ம் தேதி, ஆங்கிலம், காலை 10.00-12.00 மணி, அறிவியல், 2.00- 4.00 மணி வரை நடக்கிறது. தேர்வறை கண்காணிப்பாளர்கள் தேர்வு இறுதியில் அனைத்து விபரங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா