Skip to main content

3,5,8, வகுப்பு மாணவர்களுக்குஅடைவுத்தேர்வு வரும் 20ல் துவக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசுப்பள்ளி 3, 5 மற்றும் 8ம் வகுப்புமாணவர்களுக்கான அடைவு ஆய்வுத் தேர்வு 20ம் தேதி துவங்குவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்களின் கல்வித்தரம் குறித்து ஆய்வுநடத்தி மதிப்பீடு செய்வதற்கு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் அடைவு ஆய்வுத்தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கு 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான அடைவு தேர்வுதேதிகளை கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்புஅடைவு ஆய்வு தேர்வுகள் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது.இதன் அடிப்படையில், 3 மற்றும் 5வகுப்பு மாணவர்களுக்கு 20ம் தேதி காலை 10.00 மணி முதல் 12.00 மணி, தமிழ் மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை கணிதம், ஆங்கிலம், 21ம்தேதி காலை 10.00 மணி முதல் 12.00 வரை. தொடர்ந்து, 8ம்வகுப்பு மாணவர்களுக்கு 22ம் தேதி தமிழ் காலை 10.00 -12.00 மணி வரை, கணிதம், 2.00-4.00 மணி வரை மற்றும் 23ம் தேதி, ஆங்கிலம், காலை 10.00-12.00 மணி, அறிவியல், 2.00- 4.00 மணி வரை நடக்கிறது. தேர்வறை கண்காணிப்பாளர்கள் தேர்வு இறுதியில் அனைத்து விபரங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு