Skip to main content

மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பு: ஜனவரி 31-க்குள் விண்ணப்பிக்கலாம்


சென்னை மாநகராட்சி நடத்தும் மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பில் சேர வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர பிளஸ் 2-வி
ல் இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடம் எடுத்து படித்திருக்க வேண்டும். தொழிற்கல்வி என்றால் மருத்துவ ஆய்வுக்கூட நுட்பவியலாளர் படிப்பு படித்திருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் 50 சதவீத கூட்டு மதிப்பெண்ணும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 45 சதவீத கூட்டு மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். மேலும், 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று 17 வயது பூர்த்தியாகி இருப்பதோடு 32 வயதுக்குள்பட்டவர்களே இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி காலம் 2 ஆண்டுகள். பயிற்சி மொழி ஆங்கிலம். மாதக் கட்டணம் ரூ.300. இந்தப் படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம்.
படிவங்கள் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்படும். வருகிற 27-ஆம் தேதியில் இருந்து 31-ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்