Skip to main content

மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பு: ஜனவரி 31-க்குள் விண்ணப்பிக்கலாம்


சென்னை மாநகராட்சி நடத்தும் மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பில் சேர வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர பிளஸ் 2-வி
ல் இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடம் எடுத்து படித்திருக்க வேண்டும். தொழிற்கல்வி என்றால் மருத்துவ ஆய்வுக்கூட நுட்பவியலாளர் படிப்பு படித்திருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் 50 சதவீத கூட்டு மதிப்பெண்ணும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 45 சதவீத கூட்டு மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். மேலும், 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று 17 வயது பூர்த்தியாகி இருப்பதோடு 32 வயதுக்குள்பட்டவர்களே இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி காலம் 2 ஆண்டுகள். பயிற்சி மொழி ஆங்கிலம். மாதக் கட்டணம் ரூ.300. இந்தப் படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம்.
படிவங்கள் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்படும். வருகிற 27-ஆம் தேதியில் இருந்து 31-ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா