கடந்த ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியைச் செலுத்தாத நிறுவனங்கள் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தொழிலாளர் நல வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்
பு: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தொழிலாளர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தொழிலாளர் நல நிதிச் சட்டம் பிரிவு 2-ன்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தொழிலாளர் நலநிதி பங்குத் தொகையை நிர்வாகம் செலுத்த வேண்டும்.
மேலும், தொழிலாளர் நல நிதி செலுத்த உச்ச வரம்பு இல்லை. ஆண்டிற்கு 30 நாள்களுக்கு மேல் பணிபுரிந்த அனைவருக்கும் தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டியது உரிமையாளரின் கடமையாகும்.
இதனிடையே, கடந்த ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறினால் தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிப் பிரிவு 28-ன்படி வருவாய் வரி வசூல் சட்டத்தின்படி அபராத வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.