Skip to main content

தொழிலாளர் நல நிதி: ஜன.31-க்குள் செலுத்த வாரியம் அறிவிப்பு


கடந்த ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியைச் செலுத்தாத நிறுவனங்கள் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தொழிலாளர் நல வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்
பு: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தொழிலாளர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தொழிலாளர் நல நிதிச் சட்டம் பிரிவு 2-ன்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தொழிலாளர் நலநிதி பங்குத் தொகையை நிர்வாகம் செலுத்த வேண்டும்.
மேலும், தொழிலாளர் நல நிதி செலுத்த உச்ச வரம்பு இல்லை. ஆண்டிற்கு 30 நாள்களுக்கு மேல் பணிபுரிந்த அனைவருக்கும் தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டியது உரிமையாளரின் கடமையாகும்.
இதனிடையே, கடந்த ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறினால் தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிப் பிரிவு 28-ன்படி வருவாய் வரி வசூல் சட்டத்தின்படி அபராத வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்