Skip to main content

தொழிலாளர் நல நிதி: ஜன.31-க்குள் செலுத்த வாரியம் அறிவிப்பு


கடந்த ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியைச் செலுத்தாத நிறுவனங்கள் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தொழிலாளர் நல வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்
பு: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தொழிலாளர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தொழிலாளர் நல நிதிச் சட்டம் பிரிவு 2-ன்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தொழிலாளர் நலநிதி பங்குத் தொகையை நிர்வாகம் செலுத்த வேண்டும்.
மேலும், தொழிலாளர் நல நிதி செலுத்த உச்ச வரம்பு இல்லை. ஆண்டிற்கு 30 நாள்களுக்கு மேல் பணிபுரிந்த அனைவருக்கும் தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டியது உரிமையாளரின் கடமையாகும்.
இதனிடையே, கடந்த ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறினால் தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிப் பிரிவு 28-ன்படி வருவாய் வரி வசூல் சட்டத்தின்படி அபராத வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா