Skip to main content

சாலை ஆய்வாளர் நிலை 2-க்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, பொறியியல் பிரிவில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் நிலை- 2 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை அலகு, பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளி
ல் சாலை ஆய்வாளர் நிலை-2 என்ற பதவிக்கு காலியாக உள்ள மூன்று பணியிடங்களுக்கு கீழ்கண்ட இன சுழற்சி, தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய கல்வி தகுதிச் சான்று நகலுடன் பிப்ரவரி 10-ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளூர்.
ஆதிதிராவிடர், ஆதரவற்ற விதவைகள் - முன்னுரிமைப் பெற்றவர்களுக்கான காலிப் பணியிட எண்ணிக்கை - 1, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் - முன்னுரிமை பெற்றவர்களுக்கான காலிப்பணியிட எண்ணிக்கை - 1, பிற்படுத்தப்பட்டோர், பொது - முன்னுரிமைப் பெற்றவர்களுக்கான காலிப் பணியிட எண்ணிக்கை - 1 உள்பட மொத்தம்- 3 பணியிடங்கள்.
கல்வித் தகுதி: ஐ.டி.ஐ, சிவில் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். வயது: 2014 ஜூலை 1--ஆம் தேதி 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்