Skip to main content

சாலை ஆய்வாளர் நிலை 2-க்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, பொறியியல் பிரிவில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் நிலை- 2 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை அலகு, பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளி
ல் சாலை ஆய்வாளர் நிலை-2 என்ற பதவிக்கு காலியாக உள்ள மூன்று பணியிடங்களுக்கு கீழ்கண்ட இன சுழற்சி, தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய கல்வி தகுதிச் சான்று நகலுடன் பிப்ரவரி 10-ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளூர்.
ஆதிதிராவிடர், ஆதரவற்ற விதவைகள் - முன்னுரிமைப் பெற்றவர்களுக்கான காலிப் பணியிட எண்ணிக்கை - 1, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் - முன்னுரிமை பெற்றவர்களுக்கான காலிப்பணியிட எண்ணிக்கை - 1, பிற்படுத்தப்பட்டோர், பொது - முன்னுரிமைப் பெற்றவர்களுக்கான காலிப் பணியிட எண்ணிக்கை - 1 உள்பட மொத்தம்- 3 பணியிடங்கள்.
கல்வித் தகுதி: ஐ.டி.ஐ, சிவில் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். வயது: 2014 ஜூலை 1--ஆம் தேதி 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா