Skip to main content

சாலை ஆய்வாளர் நிலை 2-க்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, பொறியியல் பிரிவில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் நிலை- 2 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை அலகு, பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளி
ல் சாலை ஆய்வாளர் நிலை-2 என்ற பதவிக்கு காலியாக உள்ள மூன்று பணியிடங்களுக்கு கீழ்கண்ட இன சுழற்சி, தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய கல்வி தகுதிச் சான்று நகலுடன் பிப்ரவரி 10-ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளூர்.
ஆதிதிராவிடர், ஆதரவற்ற விதவைகள் - முன்னுரிமைப் பெற்றவர்களுக்கான காலிப் பணியிட எண்ணிக்கை - 1, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் - முன்னுரிமை பெற்றவர்களுக்கான காலிப்பணியிட எண்ணிக்கை - 1, பிற்படுத்தப்பட்டோர், பொது - முன்னுரிமைப் பெற்றவர்களுக்கான காலிப் பணியிட எண்ணிக்கை - 1 உள்பட மொத்தம்- 3 பணியிடங்கள்.
கல்வித் தகுதி: ஐ.டி.ஐ, சிவில் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். வயது: 2014 ஜூலை 1--ஆம் தேதி 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்