Skip to main content

பன்றிக் காய்ச்சல் : 2 நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடி பரிசோதனை அவசியம்


இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் குறையால் இருந்தால் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குளிர்காலத்தில் வைரஸ் தொற்றுகளால் காய்ச்சல் பரவுவது வழ
க்கம். தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, வேலூர், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. பன்றிக் காய்ச்சல் நோயை பருவ காலங்களில் ஏற்படும் சாதாரணக் காய்ச்சல் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மனிதனில் இருந்து...: பன்றிக் காய்ச்சலைப் பொருத்தவரை இருமும்போதோ, தும்மும்போதோ ஒருவரிடம் இருந்து வைரஸ் கிருமி பரவும். எனவே கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். சாப்பிடுவதற்கு முன், கழிவறையைப் பயன்படுத்திய பின், வீட்டிலிருந்து அலுவலகம் சென்ற உடன், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய உடன் என குறைந்தது ஒரு நாளைக்கு பத்து முறையாவது கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

2 நாளைக்கு மேல்...: ஒருவருக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக சரியான மருத்துவரையோ, மருத்துவமனையையோ அணுக வேண்டும். சுய மருத்துவம், அருகிலிருக்கும் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை வாங்குவது ஆகிய செயல்களில் ஈடுபடக் கூடாது. இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் குறையாமல் இருந்தால் உடனடியாக பன்றிக் காய்ச்சலுக்கான ரத்தப் பரிசோதைனையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்