Skip to main content

பிளஸ்–2 தேர்வுக்கான விடை எழுதும் தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன

பிளஸ்–2 தேர்வுக்கான விடை எழுதும் தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தகவல்
பிளஸ்–2 தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜ
ன் தெரிவித்தார்.

பிளஸ்–2 தேர்வு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 5–ந்தேதி பிளஸ்–2 தேர்வு தொடங்கி மார்ச் மாதம் 31–ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 9 லட்சம் மாணவ–மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 2 ஆயிரத்து 100 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தேர்வுக்கான ஏற்பாடு குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் கூறியதாவது:–

பிளஸ்–2 தேர்வை நல்ல முறையில் நடத்தி அதன் முடிவுகளை அறிவிக்கவேண்டும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

விடைத்தாள்கள் அனுப்பப்பட்டன
மாணவர்கள் விடை எழுதக்கூடிய விடைத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன. மாணவர்களின் பதிவெண், மாணவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட விடைத்தாளின் முதல் பக்கம் மட்டும் தனியாக 10 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. மீதம் உள்ள மாவட்டங்களுக்கு விரைவில் அனுப்பப்பட்டு விடும். அவ்வாறு நாங்கள் அனுப்பப்படும் முதல்பக்க தாளை விடைத்தாளுடன் வைத்து தைக்கப்படும் பணியை ஆசிரியர்கள் அந்தந்த தேர்வு மையத்தில் செய்து வருகிறார்கள்.

தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் எளிதில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு இருக்காது
இதுவரை அந்தந்த மாவட்ட தேர்வு மையங்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் இருந்துதான் வினாத்தாள் வரும். ஆனால் இந்த வருடம் தேர்வு மையத்திற்கு அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து வினாத்தாள் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள். சரியான நேரத்தில் தேர்வுகள் தொடங்கும்.

உதாரணமாக நெல்லை மாவட்டத்தின் கடைசி பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்திற்கு அருகில் உள்ளது கன்னியாகுமரி மாவட்டமாக இருந்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வினாத்தாள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு