Skip to main content

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்


 பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. பிப்ரவரி மூன்றாவது வாரத்திற்குள் இந்தத் தேர்வுகள் முடிக்கப்பட்டுவிடும். அதே மாதம் 28-க்குள் மதிப்பெண் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்க
ள் தெரிவித்தன.

இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். இந்தப் பாடங்களில் 200-க்கு 150 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், 50 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வும் நடத்தப்படும். தொழில் பிரிவு மாணவர்களுக்கு 2 பாடங்களில் 400 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.

வழக்கமாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட தேதியிலிருந்து செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே தேர்வு தேதிகளை முடிவு செய்துகொள்ளுமாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மாவட்டந்தோறும் செய்முறைத் தேர்வுகளுக்கான பணிகள் இறுதிசெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்முறைத் தேர்வுகள் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தேர்வு மையங்கள், தேர்வு நடைபெறும் கால அட்டவணை ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில்... 
சென்னையில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. 410 பள்ளிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்முறைத் தேர்வுகள் எழுத உள்ளனர்.
அதேபோல், மதுரையிலும் பிப்ரவரி 4 அல்லது 5-ஆம் தேதி பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடங்க உள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு