Skip to main content

திருக்குறள், தொல்காப்பியம் உரை உள்பட 2400 ஓலைச்சுவடிகள் இணையதளத்தில் வெளியீடு

ஓலைச்சுவடிகளில் இருந்த திருக்குறளின் பரிமேலழகர் உரை, தொல்காப்பியத்தின் நச்சினியார்க்கினியார் உரை ஆகியவை உள்பட மொத்தம் 2400 ஓலைச்சாவடிகளில் இருந்த அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் சென்னை பல்கலை
க்கழக வளாகத்தில் அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் இருந்த பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாக்கும் நிலையில் இருந்தன. எனவே அவற்றை பாதுகாக்க தமிழக அரசு முடிவு செய்தது.
மொத்தம் 72 ஆயிரத்து 748 ஓலைச்சுவடிகள் உள்ளன. அவற்றில் முதல் கட்டமாக 2400 ஓலைச்சுவடி கட்டுகளில் இருந்த திருக்குறள் உரை, தொல்காப்பியம் உரை உள்ளிட்டவை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு அவை இணையதளத்தில் வெளியிடும் விழா நேற்று சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு ஓலைச்சுவடிகளில் உள்ளவற்றை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு கூடுதல் செயலாளர் ரா.கண்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் தா.கி.ராமச்சந்திரன் உள்பட பலர் பேசினார்கள்.விழா ஏற்பாடுகளை துணை கண்காணிப்பாளர் வசந்தி உடன் இருந்து கவனித்தார்.

தொடக்கத்தில் தொல்லியல்துறை ஆணையர் தா.கார்த்திகேயன் வரவேற்றார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ப.தனபால் நன்றி கூறினார்.

விழாவையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக பரிமேலழகர் எழுதிய திருக்குறள் உரை, நச்சினியார்க்கினியர் எழுதிய தொல்காப்பியம் உரை , பெரிய புராணம், ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணி, நாலடியார், ஆகியவை ஓலைச்சுவடிகளில் இருந்தன. சிவலிங்க வடிவில் திருவாசகம் ஓலைச்சுவடியில் இருந்தது. அதை கல்லூரி மாணவிகள், பெண்கள், ஆண்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

அந்த ஓலைச்சுவடிகளில் உள்ள எழுத்துக்கள் அழகாகவும் நேர்த்தியாகவும் அதே நேரத்தில் அடித்தல் திருத்தல் இல்லாமலும் இருந்தன.
பைபிள் தாளில் எழுதப்பட்டு இருந்தது. இப்படி தாளில் எழுதப்பட்டவைகளும், ஓலைச்சுவடிகளில் உள்ளவற்றையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு