சிங்கப்பூரில் உயர் கல்வி பயில்வதற்கான கல்வி கண்காட்சி பிராண்ட் மைன்ட் நிறுவனம் சார்பில் மதுரையில் ஜன.24ல் நடக்கிறது.
ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் குக் பல்கலை சிங்கப்பூர் கல்லுாரியில் படி
க்க இந்திய மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடத்தி வருகிறது. தென் மாவட்ட மாணவர்களின் வசதிக்காக
மதுரையில், இதுதொடர்பான கல்விக் கண்காட்சி தல்லாகுளத்தில் பிராண்ட் மைன்ட் நிறுவனத்தில் நடக்கிறது.
இதில் தேர்வாகும் மாணவர்கள் ஸ்காலர்ஷிப் தேர்வில் பங்கேற்று 60 சதவீதம் வரை ஸ்காலர்ஷிப் பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு 97909 50111 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.