Skip to main content

காமராஜர் பல்கலையில் மூலிகை மருத்துவப் படிப்பு ஜன.19-ல் துவக்கம்


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப் பணித்துறையில் 6 மாதகால மூலிகை மருத்துவம் சான்றிதழ் பயிற்சி ஜனவரி 19-ம் தேதி முதல் துவங்க இருப்பதாக, திட்ட அலுவ
லர் (பொறுப்பு) சாந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பது: இப்பயிற்சியில் குடும்ப மகளிர், மாணவ, மாணவியர், மூலிகையில் ஆர்வமுள்ளவர்கள் சேரலாம். தினமும் பயிற்சி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
நேரடிப் பயிற்சி, மூலிகை தாவரங்களை கண்டறிதல், மூலிகைகளை வளர்க்கும் மற்றும் பயிரிடும் முறைகள், மருத்துவப் பயன்கள், மருத்துவக் குறிப்புகள், சித்தமருத்துவத்தின் தன்மைகள், சித்த மருத்துவ மருந்துகளின் செய்முறை பயிற்சி, இயற்கை மருத்துவம் மற்றும் நோய் தீர்க்கும் முறைகள், உணவுக் கட்டுப்பாடு, நோயில்லாமல் வாழ பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், மனித உடலமைப்பு, உடல் செயல்படும் முறைகள், உடல் தாது மற்றும் உயிர்த்தாது பற்றிய விளக்கம், அழகு சாதனங்கள் தயாரிப்பு முறைகள், மூலிகை ஏற்றுமதி, வணிகத்திற்கான குறிப்புகள் பயிற்சியின் போது கற்றுத்தரப்படும்.
மதுரை அழகர்கோவில் சாலையிலுள்ள பல்கலைக்கழக வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப்பணித் துறையில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களைப் பெற, திட்ட அலுவலர் (பொறுப்பு), வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப்பணித் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அழகர்கோவில் சாலை, மதுரை-2 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசியில் 0452-2537838 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா