மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப் பணித்துறையில் 6 மாதகால மூலிகை மருத்துவம் சான்றிதழ் பயிற்சி ஜனவரி 19-ம் தேதி முதல் துவங்க இருப்பதாக, திட்ட அலுவ
லர் (பொறுப்பு) சாந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பது: இப்பயிற்சியில் குடும்ப மகளிர், மாணவ, மாணவியர், மூலிகையில் ஆர்வமுள்ளவர்கள் சேரலாம். தினமும் பயிற்சி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
நேரடிப் பயிற்சி, மூலிகை தாவரங்களை கண்டறிதல், மூலிகைகளை வளர்க்கும் மற்றும் பயிரிடும் முறைகள், மருத்துவப் பயன்கள், மருத்துவக் குறிப்புகள், சித்தமருத்துவத்தின் தன்மைகள், சித்த மருத்துவ மருந்துகளின் செய்முறை பயிற்சி, இயற்கை மருத்துவம் மற்றும் நோய் தீர்க்கும் முறைகள், உணவுக் கட்டுப்பாடு, நோயில்லாமல் வாழ பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், மனித உடலமைப்பு, உடல் செயல்படும் முறைகள், உடல் தாது மற்றும் உயிர்த்தாது பற்றிய விளக்கம், அழகு சாதனங்கள் தயாரிப்பு முறைகள், மூலிகை ஏற்றுமதி, வணிகத்திற்கான குறிப்புகள் பயிற்சியின் போது கற்றுத்தரப்படும்.
மதுரை அழகர்கோவில் சாலையிலுள்ள பல்கலைக்கழக வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப்பணித் துறையில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களைப் பெற, திட்ட அலுவலர் (பொறுப்பு), வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப்பணித் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அழகர்கோவில் சாலை, மதுரை-2 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசியில் 0452-2537838 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.