Skip to main content

18-ம் தேதி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்

மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை மாநகரில் போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தாண்டு 2 தவணைகளில் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதில், 5 வயதிற்குட்பட்ட சுமார் 6.60 லட்சம்
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு, மாநகராட்சி நல்வாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், ரயில்வே நிலையங்கள், பஸ் நிலையங்கள் என 1,502 மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

மேலும், மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த முகாம்கள், காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிவரை நடைபெறும்.  இதில், பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள் உட்பட சுமார் 7,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 2வது தவணை சொட்டு மருந்து முகாம், பிப்ரவரி 22ம் தேதியும் நடைபெறவுள்ளது. இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்