Skip to main content

18-ம் தேதி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்

மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை மாநகரில் போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தாண்டு 2 தவணைகளில் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதில், 5 வயதிற்குட்பட்ட சுமார் 6.60 லட்சம்
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு, மாநகராட்சி நல்வாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், ரயில்வே நிலையங்கள், பஸ் நிலையங்கள் என 1,502 மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

மேலும், மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த முகாம்கள், காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிவரை நடைபெறும்.  இதில், பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள் உட்பட சுமார் 7,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 2வது தவணை சொட்டு மருந்து முகாம், பிப்ரவரி 22ம் தேதியும் நடைபெறவுள்ளது. இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன