மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை மாநகரில் போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தாண்டு 2 தவணைகளில் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதில், 5 வயதிற்குட்பட்ட சுமார் 6.60 லட்சம்
மேலும், மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த முகாம்கள், காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிவரை நடைபெறும். இதில், பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள் உட்பட சுமார் 7,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 2வது தவணை சொட்டு மருந்து முகாம், பிப்ரவரி 22ம் தேதியும் நடைபெறவுள்ளது. இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.