Skip to main content

காந்திகிராம கிராமிய பல்கலை: 100 ஆண்டுகள் கிழியாத சான்றிதழ் அறிமுகம்


காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழாவின்போது, 100 ஆண்டுகளுக்கு கிழியாத பட்டச் சான்றிதழ்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, துணைவேந்த
ர் சு. நடராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து, அவர் மேலும் தெரிவித்தது: காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழா, ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தர் ரெனைனா ஜப்வாலா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 1,044 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இப்பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் பட்டங்களில் முதன்முறையாக 10 சிறப்பு அம்சங்களான எழுத்துகள் நீரில் அழியாத தன்மை, கிழிக்க முடியாத தன்மை, ஆலமரத்துடன் கூடிய பல்கலை. மணி மைதானம் பின்புலம், பல்கலை. சின்னத்துடன் கூடிய பாலிமர் ஷீட்டில் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இதனை 100 ஆண்டுகள் வரை கிழியாமல் பாதுகாக்க முடியும்.
அதேபோல், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் பட்டியலும் 16 சிறப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளன என்றார் அவர்.  அப்போது, பல்கலைக்கழகப் பதிவாளர் பி. பாலசுப்பிரமணியன், நிதி அலுவலர் பாலசுப்பிரமணியம், மக்கள் தொடர்பு அலுவலர் ஒ. முத்தையா உடனிருந்தனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா