Skip to main content

குரூப் 1: முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு


தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:


துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வருமான வரித்து
றை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ஆகிய பதவிகள் அடங்கிய குரூப் 1 தொகுதிக்கு உள்பட்ட 79 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வில் 70 ஆயிரத்து 547 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர்.

விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி, அந்தப் பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், முதன்மை எழுத்துத் தேர்விற்கு 4 ஆயிரத்து 389 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது.

முதன்மை எழுத்துத் தேர்வு மே 2-ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன