Skip to main content

குரூப் 1: முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு


தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:


துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வருமான வரித்து
றை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ஆகிய பதவிகள் அடங்கிய குரூப் 1 தொகுதிக்கு உள்பட்ட 79 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வில் 70 ஆயிரத்து 547 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர்.

விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி, அந்தப் பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், முதன்மை எழுத்துத் தேர்விற்கு 4 ஆயிரத்து 389 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது.

முதன்மை எழுத்துத் தேர்வு மே 2-ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா