Skip to main content

TRB : உதவி பேராசிரியர் பணி நேர்முக தேர்வுக்கு அழைப்பு


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,064 உதவி பேராசிரியர் நியமன விவகாரத்தில், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட, ஆறு பாடங்களுக்கான நேர்முகத் தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம்
வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே, ஆங்கிலம் உள்ளிட்ட, சில பாடங்களுக்கு, நேர்முகத் தேர்வை நடத்தி, தேர்வுப் பட்டியலையும், டி.ஆர்.பி., வெளியிட்டுவிட்டது.
தற்போது, வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வரலாறு, சுற்றுலா, சுற்றுலா மற்றும் சுற்றுலா நிர்வாகம் ஆகிய, ஆறு பாடங்களுக்கு, நேர்முகத் தேர்வு அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. நேர்முகத் தேர்வு, வரும் 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை, சென்னையில் உள்ள டி.ஆர்.பி., அலுவலகத்தில் நடக்கும் எனவும், அழைக்கப்பட்டு உள்ளவர் விவரம், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. தேர்வர்கள், இணையதளத்தில் இருந்து, அழைப்புக் கடிதத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உதவி பேராசிரியர் தேர்வுக்கு, கற்பித்தல் அனுபவத்திற்கு, 15 மதிப்பெண், கல்வித்தகுதிக்கு, 9 மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, 10 மதிப்பெண் என, 34 மதிப்பெண் அடிப் படையில், இறுதியாக, தேர்வுப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா