Skip to main content

TNPSC : குரூப் - 4 தேர்வு இன்று கடைசி நாள்


 குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்), தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, 5,000
இடங்களுக்கு, டிசம்பர் 21ம் தேதி, போட்டித் தேர்வை நடத்துகிறது.
இதற்கு, அக்டோபர் 14ம் தேதி முதல், www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக, ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு, இன்று கடைசி நாள். இன்று நள்ளிரவு, 12:00 மணி வரை, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் செலுத்த, 14ம் தேதி கடைசி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர் (பிணையம்) (காலி பணியிடம் 39) இளநிலை உதவியாளர் (பிணையமற் றது)- 2133, தட்டச்சர்-1683, சுருக்கெழுத்து தட்டச்சர்-331, வரித் தண்டலர் -22, வரைவாளர்-53, நில அளவர்-702 ஆகிய மொத்தம் 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அக்டோபர் 14ல் அறிவித்தது. அன்றைய தினமே இணையதளம் வாயிலாக தேர்வுக்கு விண்ணப்பித்தல் தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் என்று போட்டி போட்டு குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.நேற்று மாலை நிலவரப்படி தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியதாக கூறப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கடைசி நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. இதனால், எண்ணிக்கை மேலும் உயரும்.

இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் என்றாலும், தேர்வு கட்டணங்களை இந்தியன் வங்கி கிளைகள், அஞ்சலகங்களில் செலுத்த வருகிற 14ம் தேதி வரை செலுத்தலாம் என்று டி.என்.பி. எஸ்.சி. அறிவித்துள்ளது. இதையடுத்து டிசம்பர் 21ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுகா என 244 மையங்கள் அமைக்கப்பட உள்ளன

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா