Skip to main content

குழந்தைகள் தின 'கூகுள் டூடுல்' போட்டி: சண்டிகர் மாணவர் வெற்றி

புதுடெல்லி: தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, கூகுள் இந்தியா நடத்திய 'கூகுள் டூடுல்' போட்டியில் சண்டிகர் மாணவர் அருண் குமார் யாதவ் வெற்றி பெற்றார்.

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ல் கூகுளின் இந்திய வலைத்தளப் பக்கத்தின் மாணவர் அருண் குமாரின் படைப்பில் உருவான டூடுல் வெளியாகும்.


உலக அளவில் சிறப்பு தினங்களையும், தலைவர்கள் மற்றும் வரலாற்று நாயகர்களின் பிறந்த தினங்களையும் கூகுள் தனது வலைப்பக்கத்தில் சிறப்பிக்கும். கண்ணைக் கவரும் அம்சங்கள்கொண்ட அந்தப் பக்கங்களே கூகுள் டூடுல் எனப்படுகிறது.

நடப்பு ஆண்டின் குழந்தைகள் தினத்தையொட்டி, இந்திய மாணவர்களுக்கு கூகுள் இந்தியா ஒரு போட்டியை வைத்தது. டூடுல் ஃபார் கூகுள் என்பது அந்தப் போட்டி. அதன் தலைப்பு - 'வேற்றுமையில் ஒற்றுமை'.

இந்தப் போட்டியில் இந்தியா முழுவதும் 60 நகரங்களைச் சேர்ந்த 2,00,000 சிறுவர், சிறுமிகள் தங்கள் கற்பனையில் டூடுல்களை வரைந்து அனுப்பினர்.

டெல்லியில் உள்ள ரயில் அருங்காட்சியகத்தில் திங்கட்கிழமை வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதில், சண்டிகரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் அருண் குமாரின் டூடுல், குழந்தைகள் தினத்தன்று கூகுள் இந்தியாவில் வெளியிட தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. கால்பந்து வீரர், கதகளி நடனக் கலைஞர், மயில், விவசாயி மற்றும் பூக்களைக் கொண்டு கூகுள் டூடுலை அவர் கண்ணைக்கவரும் வகையில் டூடுலை உருவாக்கினார்.

மேலும், கோழிக்கோடைச் சேர்ந்த வாசுதேவன் தீபக், பெங்களூரைச் சேர்ந்த ஷ்ர்வயா மற்றும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ப்ரீத்தம் பால் ஆகிய மூன்று மாணவர்களும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிரபல கார்ட்டூனிஸ்ட் அஜித் நினான் மற்றும் நடிகர் போமன் ஹிரானி ஆகியோர் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

''குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் கூகுள் டூடுல் போட்டிகளை நடத்தி வருகிறோம். கூகுள் மூலமாக விழிப்பு உணர்வும் மேற்கொண்டு வருகிறோம்," என்றார் கூகுள் இந்தியாவின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜன் ஆனந்தன். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா