Skip to main content

குழந்தைகள் தின 'கூகுள் டூடுல்' போட்டி: சண்டிகர் மாணவர் வெற்றி

புதுடெல்லி: தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, கூகுள் இந்தியா நடத்திய 'கூகுள் டூடுல்' போட்டியில் சண்டிகர் மாணவர் அருண் குமார் யாதவ் வெற்றி பெற்றார்.

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ல் கூகுளின் இந்திய வலைத்தளப் பக்கத்தின் மாணவர் அருண் குமாரின் படைப்பில் உருவான டூடுல் வெளியாகும்.


உலக அளவில் சிறப்பு தினங்களையும், தலைவர்கள் மற்றும் வரலாற்று நாயகர்களின் பிறந்த தினங்களையும் கூகுள் தனது வலைப்பக்கத்தில் சிறப்பிக்கும். கண்ணைக் கவரும் அம்சங்கள்கொண்ட அந்தப் பக்கங்களே கூகுள் டூடுல் எனப்படுகிறது.

நடப்பு ஆண்டின் குழந்தைகள் தினத்தையொட்டி, இந்திய மாணவர்களுக்கு கூகுள் இந்தியா ஒரு போட்டியை வைத்தது. டூடுல் ஃபார் கூகுள் என்பது அந்தப் போட்டி. அதன் தலைப்பு - 'வேற்றுமையில் ஒற்றுமை'.

இந்தப் போட்டியில் இந்தியா முழுவதும் 60 நகரங்களைச் சேர்ந்த 2,00,000 சிறுவர், சிறுமிகள் தங்கள் கற்பனையில் டூடுல்களை வரைந்து அனுப்பினர்.

டெல்லியில் உள்ள ரயில் அருங்காட்சியகத்தில் திங்கட்கிழமை வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதில், சண்டிகரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் அருண் குமாரின் டூடுல், குழந்தைகள் தினத்தன்று கூகுள் இந்தியாவில் வெளியிட தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. கால்பந்து வீரர், கதகளி நடனக் கலைஞர், மயில், விவசாயி மற்றும் பூக்களைக் கொண்டு கூகுள் டூடுலை அவர் கண்ணைக்கவரும் வகையில் டூடுலை உருவாக்கினார்.

மேலும், கோழிக்கோடைச் சேர்ந்த வாசுதேவன் தீபக், பெங்களூரைச் சேர்ந்த ஷ்ர்வயா மற்றும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ப்ரீத்தம் பால் ஆகிய மூன்று மாணவர்களும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிரபல கார்ட்டூனிஸ்ட் அஜித் நினான் மற்றும் நடிகர் போமன் ஹிரானி ஆகியோர் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

''குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் கூகுள் டூடுல் போட்டிகளை நடத்தி வருகிறோம். கூகுள் மூலமாக விழிப்பு உணர்வும் மேற்கொண்டு வருகிறோம்," என்றார் கூகுள் இந்தியாவின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜன் ஆனந்தன். 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்