Skip to main content

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட "ஆகாஷ்' ஏவுகணை, ஒடிஸா மாநிலம், சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் திங்கள்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குநர் எம்.வி.கே.வி.பிரசாத் கூறுகையில்,
"இது விமானப் படையினரின் வழக்கமான சோதனைகளில் ஒன்று. இதுபோன்று மேலும் சில ஏவுகணைகள் இந்த வாரத்தில் சோதிக்கப்பட உள்ளன' என்றார்.

ஆகாஷ் ஏவுகணை, நிலத்தில் இருந்து வான் இலக்குகளை தாக்கும் நடுத்தர வகையைச் சேர்ந்ததாகும். இது, 60 கிலோ எடை கொண்ட வெடிபொருள்களுடன் 25 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கை துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டதாகும்.

பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை ஏற்கெனவே விமானப் படையில் சேர்க்கப்பட்டுவிட்டது. தரைப்படைக்கான ஏவுகணை வடிவமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா