Skip to main content

மருத்துவ படிப்பு சேர்க்கையில் தமிழ் பாட மதிப்பெண் சேர்க்கப்படுமா?

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின்போது, இருவர், ஒரே 'கட் - ஆப்'மதிப்பெண் பெற்றால், தமிழ் பாட மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க கோரி தாக்கலான மனுவை, தனி நீதிபதி விசாரணைக்கு
மாற்றி, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.
பழநியைச் சேர்ந்த, டாக்டர் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கையின்போது, 'ரேங்க்' பட்டி யல் வெளியிடப்படும். இரு மாணவர்கள், ஒரே, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றால், யாருக்கு முன்னுரிமை வழங்குவது என, விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில், பிளஸ் 2 உயிரியல் பாட மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமைவழங்குதல்; இரண்டாவதாக வேதியியல் மற்றும் விருப்பப் பாடங்களில் பெற்ற மதிப்பெண், பிறந்த தேதி, 'ரேண்டம் எண்' அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. 

முதல் நிபந்தனை ஏற்புடையதே. 'ரேண்டம் எண்', பிறந்த தேதி என்பது அதிர்ஷ்டத்தை பொறுத்தது. இது ஏற்புடையதல்ல. 
'ரேண்டம்', பிறந்த தேதிக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்குப் பதிலாக, பிளஸ் 2 தமிழ் பாடத்தில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதை, 2015 - 16ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கையில் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக்குழு செயலருக்கு மனு அனுப்பி உள்ளேன். இதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க, அரசு தரப்பிற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தார். இம்மனு, நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி கொண்ட, 'பெஞ்ச்' முன் நேற்று, விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், வெங்கடேஷ் ஆஜரானார். நீதிபதிகள், 'இதை பொதுநல வழக்காக ஏற்க முடியாது. எனவே, இம்மனு, தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றப்படுகிறது' என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு