Skip to main content

உலோகங்கள் துருப்பிடிக்காமல் தடுக்க வெள்ளைப்பூண்டு சாறு:பேராசிரியர் கண்டுபிடிப்பு

“ உலோகங்கள் துருபிடிக்காமல் இருப்பதற்கு, வெள்ளைப்பூண்டு' சாறு உதவி புரிகிறது” என திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.

தொழிற்சாலைகளில் இரும்பு மற்றும் உலோக பொருட்கள் அதிகளவில்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சைக்கிள், இருசக்கர மோட்டார் வாகனம், பீரோ, இரும்பு, உலோக 'வாஷ் பேசின்' ஆகியவை மக்கள் தினசரி பயன்பாடுகளில் உள்ளன.

உப்புத் தண்ணீராலும், அதிகபடியான ஈரப்பதக்காற்றாலும் அதிவிரைவில் உலோகங்கள் துருப் பிடித்து திறன் குறைந்துவிடுகிறது. உலோகங்கள் துருப்பிடிப்பதை வெள்ளைப் பூண்டுகளின் சாற்றைக் கொண்டு முழுமையாக குறைத்துவிடலாம்” என பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார். இவர் 250க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார்.

200 க்கும் மேற்பட்ட 'உலோகங்களின் அரிமானம்' பற்றிய ஆய்வு கட்டுரைகளை அறிவியல் கருத்தரங்குகளில் சமர்பித்துள்ளார்.இதற்காக மும்பையில் நடைபெற்ற , கார்கான்-2014 உலக அரிமான மாநாட்டில், நேஷனல் அசோசியேஷன் ஆப் காரிசன் இன்ஜினியர்ஸ் இன்டர்நேஷனல் கேட்வே”யின் இந்திய பிரிவு, பேராசிரியர் ராஜேந்திரனுக்கு தேசிய விருது வழங்கி கவுரவித்துள்ளது.

அவர் கூறுகையில், “பாஸ்போனிக் அமிலம், டிரைசோடியம் சிட்ரேட், சோடியம் பொட்டாசியம் டாட்ரேட், கால்சியம் குளுக்கோனேட் போன்ற வேதிப்பொருட்களோடு 'கார்னிக் எக்ஸ்ராக்ட்' எனப்படும் வெள்ளைப்பூண்டுகளின் சாறுகளையும் சேர்த்து நொதிக்க வைக்க வேண்டும். இதில் கிடைக்கும் சாறை துருப்பிடித்த பகுதிகளில் ஊற்றினால், துருப்பிடித்த பகுதிகள் முற்றிலும் மறைந்து உலோகத்தின் ஒரிஜினல் தன்மை கிடைத்துவிடும். ” என்றார்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு