Skip to main content

உலோகங்கள் துருப்பிடிக்காமல் தடுக்க வெள்ளைப்பூண்டு சாறு:பேராசிரியர் கண்டுபிடிப்பு

“ உலோகங்கள் துருபிடிக்காமல் இருப்பதற்கு, வெள்ளைப்பூண்டு' சாறு உதவி புரிகிறது” என திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.

தொழிற்சாலைகளில் இரும்பு மற்றும் உலோக பொருட்கள் அதிகளவில்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சைக்கிள், இருசக்கர மோட்டார் வாகனம், பீரோ, இரும்பு, உலோக 'வாஷ் பேசின்' ஆகியவை மக்கள் தினசரி பயன்பாடுகளில் உள்ளன.

உப்புத் தண்ணீராலும், அதிகபடியான ஈரப்பதக்காற்றாலும் அதிவிரைவில் உலோகங்கள் துருப் பிடித்து திறன் குறைந்துவிடுகிறது. உலோகங்கள் துருப்பிடிப்பதை வெள்ளைப் பூண்டுகளின் சாற்றைக் கொண்டு முழுமையாக குறைத்துவிடலாம்” என பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார். இவர் 250க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார்.

200 க்கும் மேற்பட்ட 'உலோகங்களின் அரிமானம்' பற்றிய ஆய்வு கட்டுரைகளை அறிவியல் கருத்தரங்குகளில் சமர்பித்துள்ளார்.இதற்காக மும்பையில் நடைபெற்ற , கார்கான்-2014 உலக அரிமான மாநாட்டில், நேஷனல் அசோசியேஷன் ஆப் காரிசன் இன்ஜினியர்ஸ் இன்டர்நேஷனல் கேட்வே”யின் இந்திய பிரிவு, பேராசிரியர் ராஜேந்திரனுக்கு தேசிய விருது வழங்கி கவுரவித்துள்ளது.

அவர் கூறுகையில், “பாஸ்போனிக் அமிலம், டிரைசோடியம் சிட்ரேட், சோடியம் பொட்டாசியம் டாட்ரேட், கால்சியம் குளுக்கோனேட் போன்ற வேதிப்பொருட்களோடு 'கார்னிக் எக்ஸ்ராக்ட்' எனப்படும் வெள்ளைப்பூண்டுகளின் சாறுகளையும் சேர்த்து நொதிக்க வைக்க வேண்டும். இதில் கிடைக்கும் சாறை துருப்பிடித்த பகுதிகளில் ஊற்றினால், துருப்பிடித்த பகுதிகள் முற்றிலும் மறைந்து உலோகத்தின் ஒரிஜினல் தன்மை கிடைத்துவிடும். ” என்றார்

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா