Skip to main content

ஒயிட் ஸ்பேஸ் மூலம் இலவச இணைய இணைப்பு

நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தினை நிறைவேற்றுவதில் பல தொழில் நுட்ப நிறுவனங்கள் முனைப்புடன் பல திட்டங்களை வடிவமைத்து செயல்பட உள்ளன. இந்த வழியில்,
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மோடி அவர்களின், IT + IT = IT ( இந்தியர்களின் திறமை + தகவல் தொழில் நுட்பம் + நாளைய இந்தியா (“Indian Talent” plus “Information Technology” equals ” India Tomorrow”) என்ற இலக்கினை அடைய, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திட்டம் நிச்சயம் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பொதுத் துறை நிறுவனமான தூரதர்ஷன் மற்றும் இந்திய அரசு ஆகிய இரண்டும் பயன்படுத்தும் அலைக் கற்றை அலை வரிசையில், முழுமையான திறன் பயன்படுத்தப்படவில்லை. இவை பயன்படுத்தும் அலைவரிசையினை “ஒயிட் ஸ்பேஸ்” என அழைக்கின்றனர். மைக்ரோசாப்ட் இதனைப் பயன்படுத்தி, தொலை தூரக் கிராமப்புறங்களில், இறுதி வீடு வரை இணைய இணைப்பினை வழங்கலாம் என்று திட்டம் தந்துள்ளது. 
வழக்கமான வை பி அலைவரிசை 100 மீட்டர் தொலைவிற்கே இயங்க முடியும். ஆனால், அரசு மற்றும் தூரதர்ஷன் தன் ஒளிபரப்பிற்காகப் பயன்படுத்தும் 200 - 300 Mhz ஸ்பெக்ட்ரம் ஒயிட்ஸ்பேஸ் அலைவரிசை, 10 கி.மீ தூரம் வரைச் சிறப்பாகச் செயல்படும். இதில் உள்ள பயன்படுத்தாத அலைவரிசைத் திறனை மைக்ரோசாப்ட் பயன்படுத்த திட்டமிடுகிறது. இதனைப் பயன்படுத்துவதை, தகவல் தொழில் நுட்பவியலில் ”White Space” தொழில் நுட்பம் என அழைக்கின்றனர். இதனைப் பயன்படுத்தி தரப்படும் இணைய வேகத்தில் தகவல் பரிமாற்றத்தின் வேகம் 16Mbps இருக்கும். இது தற்போது சராசரியாக, அதிக பட்சமாகத் தரப்படும் 2 Mbps வேகத்தைக் காட்டிலும் எட்டு மடங்கு கூடுதல் ஆகும். இத்தகைய ஒயிட் ஸ்பேஸ் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, வை பி இணைப்பு தரும் பழக்கம், அமெரிக்காவில் சோதிக்கப்பட்டு, தற்போது வெற்றி கரமாக சில இடங்களில் செயல்பட்டு வருகிறது. சிங்கப்பூரிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்தியாவைப் பொறுத்த வரை 20 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இது பெரிய தொகையாகத் தெரிந்தாலும், இந்திய ஜனத்தொகை எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இது மிகவும் குறைவுதான். எனவே தான், பிரதமர் அவர்களும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் அனைவருக்கும் இணையம் என்ற இலக்கினை அடையப் பாடுபடுகின்றனர்.
பிரதமர் மோடி அவர்களின் ”எல்லை இறுதி கிராமம் வரை இணையம் தரப்பட வேண்டும்; அப்போதுதான் இந்தியா முழுமையான டிஜிட்டல் இந்தியாவாக மாறும்” என்ற கனவு இந்த ஒயிட் ஸ்பேஸ் தொழில் நுட்ப இணைப்பு மூலம் சாத்தியமாகும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா