Skip to main content

வாட்ஸ் அப்பில் மாற்றம்


வாட்ஸ் சேஜிங் அப் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய வசதி முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அதிருப்தியை உண்டாக்கியது. இதனால் சர்ச்சையும், விவாதமும் சூடுபிடித்த நிலையில் வாட்ஸ் அப், இந்த வசதி வேண்டாம் என்றால் அதை நீக்கும் வசதியை அறிமுகம்
செய்திருக்கிறது.

வாட்ஸ் அப் சேவையில் பரிமாறப்படும் செய்தி படிக்கப்பட்டதா என்பதை உணர்த்தும் நீல நிற டிக் வசதி சமீபத்தில் அறிமுகமானது. ஒரு டிக்குகள் செய்தி அனுப்பட்டதை உணர்த்தும். இரண்டு டிக் அது சென்றடைந்துவிட்டதைத் தெரிவிக்கும். நீல நிறமாக இரண்டு டிக்குகள் தோன்றினால் அந்தச் செய்தி படிக்கப்பட்டதாகப் பொருள்.
ஆனால் இந்த வசதி பலத்த அதிருப்தியை உண்டாக்கியது. செய்திகளுக்குப் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இது ஏற்படுத்துவதாகப் பயனாளிகள் கருதினர். பதில் அளிக்கப்படாத செய்தி எனும் சங்கடத்தையும் தேவையில்லாமல் ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பயனாளிகளின் பரவலான அதிருப்தியை அடுத்து வாட்ஸ் அப், இந்த அம்சத்தை விரும்பாவிட்டால் அதைச் செயலிழக்க செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. செட்டிங் அமைப்பில் பிரைவசி பகுதிக்குச் சென்று இதைச் செயலிழக்க வைக்கலாம். ஆண்ட்ராய்டு பயனாளிகள் வாட்ஸ் அப் புதிய வர்ஷெனை டவுன்லோடு செய்து இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வாட்ஸ் அப் இணையதளத்திலிருந்தும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு