Skip to main content

இந்திய சி.பி.எஸ்.இ. சான்றிதழ்களை பிரிட்டன் பல்கலைகள் இனி ஏற்கும்!


         இந்திய கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ. வழங்கும் பிளஸ் 2 சான்றிதழை ஏற்றுக்கொள்ள, பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் முடிவுசெய்துள்ளன. இதன்மூலம், சி.பி.எஸ்.இ. படித்த மாணவர்கள், பிரிட்டன் பல்கலைகளில்,
இளநிலைப் படிப்புகளில் எளிதாக சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

        மேலும், பிரிட்டன் சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் விசா பிரச்சினையிலும், உதவ தயாராக இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய மனிதவள அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: தற்போதுவரை, இந்தியாவில் வழங்கப்படும் CBSE சான்றிதழ்கள், பல பிரிட்டன் கல்வி நிறுவனங்களால் ஏற்கப்படுவதில்லை. எனவே, இப்பிரச்சினைக் குறித்து, ஏற்கனவே, பிரிட்டனிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான ஒரு சாதகமான முடிவு பெறப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பிரிட்டன் பல்கலைகளும், CBSE சான்றிதழ்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும்.

இந்தியாவில் பெறும் பள்ளி இறுதி சான்றிதழ்களை, பல பிரிட்டன் பல்கலைகள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததால், அந்நாட்டில் படிக்க விரும்பிய பல இந்திய மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர். CBSE கல்வி முறையின் மூலம் பிளஸ் 2 நிறைவுசெய்யும் மாணவர்கள், பிரிட்டன் பல்கலைகளில் இளநிலைப் படிப்பில் சேர வேண்டுமெனில், அவர்கள் add-on course முடிக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது.

ஏனெனில், இந்திய பள்ளிக் கல்வியை முடிப்பதற்கு செலவாகும் ஆண்டுகளைவிட, பிரிட்டன் பள்ளிக் கல்வியை நிறைவுசெய்ய, ஒரு ஆண்டு கூடுதலாக செலவாகும். எனவேதான் இந்த add-on course நிபந்தனை.

எனவே, இதுதொடர்பான சிக்கல்களைத் தீர்த்து, பள்ளி அளவீட்டு திட்டம், பள்ளி மற்றும் கல்லூரி தலைமைத்துவ திட்டம் மற்றும் ஒவ்வொருவருக்கு ICT மூலமாக கல்வியைக் கொண்டு செல்வது போன்ற அம்சங்களில், இரு நாடுகளும், தங்களின் முரண்பாடுகளை களையும் வகையில், செயல்பாட்டுக் குழுக்களை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கல்வியாளர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் ஆகியோரை பரிமாற்றம் செய்துகொள்வது தொடர்பாகவும், இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.