Skip to main content

அரசு ஊழியர்கள் காப்பீட்டுத் திட்டம்: சிகிச்சை பெறும் பட்டியலில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை

காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளின் பட்டியலில் பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளது. தனியார் மருத்துவமனைகளின்
பட்டியலுடன் இந்த மருத்துவமனையும் இணைக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா நிறுவனத்தின் மூலமாக இந்தக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்கள், அவரது குடும்பத்தினர் ரூ.4 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெறலாம்.

மருத்துவமனைகள் பட்டியல்: அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் காப்பீட்டுத் திட்டத்தின் வழியாக தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை பெறலாம். எந்தெந்த மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெறலாம் என்பதை தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அந்தப் பட்டியலுடன் இப்போது 22 மருத்துவமனைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. அவ்வாறு சேர்க்கப்பட்டுள்ள பட்டியலில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த மருத்துவமனையானது, இப்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு