Skip to main content

"உடற்கல்வி ஆசிரியர், நூலகர் பட்டம் பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்'


திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர், நூலகர் பட்டம் பெற்றவர்கள் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே பதிவு செய்துகொள்ளலாம்.

இதுதொடர்பாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முகமதுசித்திக்
வெளியிட்ட செய்திக் குறிப்பு: உடற்கல்வி ஆசிரியர் நூலகர் பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களது பதிவுகள் பெருநகரங்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்த நிலையை மாற்றம் செய்து, அந்தந்த மாவட்ட அலுவலகங்களிலேயே பதிவு செய்யவும், பராமரிக்கவும் வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, இத்தகைய சான்றுகளை ஏற்கெனவே தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் அவற்றை திருநெல்வேலி மாவட்ட அலுவலகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி, பலரது பதிவுகளும் திருநெல்வேலி அலுவலகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை பதிவு செய்யாத நபர்கள் இருந்தால் உடனடியாக திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, அஞ்சல் வழியிலோ விண்ணப்பித்து பதிவு செய்யலாம்.

விண்ணப்பத்துடன் கல்விச் சான்று, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை நகலுடன் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என முகமதுசித்திக் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு