Skip to main content

உயர்கல்வி படிக்கும் ஆசிரியருக்கு நிபந்தனை


              "எம்.பில்., - பி.எச்.டி., பயிலும் ஆசிரியர்களால், பள்ளிகளில் கற்பித்தல் பணி சிறிதும் பாதிக்கக்கூடாது,' என, தொடக்க கல்வி இயக்குனரகம்
அறிவுறுத்தியுள்ளது.
           ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், மாநகராட்சி மற்றும் அரசு துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர், எம்.பில்., - பி.எச்.டி., படிக்கின்றனர். பணியில் உள்ள ஆசிரியர்கள், உயர்கல்வி பயில முன்அனுமதி கேட்டு, தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு கடிதம் அனுப்புவது வழக்கம். இதற்கான அனுமதியை அந்தந்த பகுதி உதவி தொடக்க கல்வி அலுவலர் அல்லது கூடுதல் தொடக்க கல்வி அலுவலரே வழங்கலாம் என தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், "உயர்கல்வி பயில்வதற்கு ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கும் முன், நிபந்தனையை பின்பற்ற வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும், கற்பித்தல் பணி பாதிக்கக்கூடாது. தனது கடமையில் இருந்து ஆசிரியர் சிறிதும் விலகக்கூடாது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்