Skip to main content

பாடத் திட்டம் வாயிலாக பாலியல் வன்கொடுமைத் தடுப்பு விழிப்புணர்வு

பெண் குழந்தைகளுக்கு பாலியல் கொடுமைகள் குறித்து, பாடப் புத்தகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளையைச் சேர்ந்த வழக்குரைஞர் டி.சித்ராதேவி உயர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் விவரம்:

இளம் மாணவர்கள், குறிப்பாக பெண் குழந்தைகள் தினந்தோறும், வீடுகள், பள்ளிகள், தெருக்கள் ஆகிய இடங்களில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

மத்திய அரசு கடந்த 2007-ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடத்திய குழந்தைகள் துன்புறுத்தல் தொடர்பான ஆய்வில், 53 சதவீத குழந்தைகள் வீடுகள், பள்ளிகள், இதர இடங்களில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாகத் தெரிவித்து. இதில், அதிகமாக வீடுகள், பள்ளிகளில்தான் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டது.

பாலியல் கொடுமையில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கு, அவர்களின் பாடப்புத்தகத்தில், சந்தேகத்துக்குறிய நடத்தை குறித்து படமாகவும், கேலிச் சித்திரம் வாயிலாகவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தேன். அதில், இந்த மாதம் 19-ஆம் தேதி குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் எதிர்ப்பு தினம் கொண்டாடும் போது, பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு தெரிவித்தேன். ஆனால், எனது மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பெண் குழந்தைகளை பாலியல் கொடுமைகளிலிருந்து தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை 8 வாரங்களுக்குள் பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்