Skip to main content

சிலிண்டருக்கு பணம் இன்று முதல் வங்கியில்!

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை, பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கே நேரடியாக செலுத்தும் திட்டம், புதுச்சேரி உட்பட, 11 மாநிலங்களில்உள்ள, 54 மாவட்டங்களில், இன்று முதல் மீண்டும்
அமலாகிறது.
இதனால், பயனாளிகள் சந்தை விலைக்கே, இனி, சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்க நேரிடும். அதற்கான மானியம், அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதாவது, சந்தை விலைக்கும், மானிய விலைக்கும் இடையேயான வேறுபாட்டுத் தொகை, வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 

முதலில் புக்கிங் செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரியானதும், அடுத்த சிலிண்டருக்கான மானியம், முன்பணமாக, பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். நேரடி மானிய திட்டத்தில் ஏற்கனவே சேர்ந்தவர்களுக்கு, அவர்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், தொடர்ந்து, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதில், பிரச்னை எதுவும் இருக்காது.மானியத் தொகை வங்கி கணக்கில் வரவாவதில், பிரச்னை ஏதும் இருந்தால், 'www.mylpg.in' என்ற இணையதளத்தில், தங்களின் புகாரை பதிவு செய்யலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு