Skip to main content

சிலிண்டருக்கு பணம் இன்று முதல் வங்கியில்!

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை, பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கே நேரடியாக செலுத்தும் திட்டம், புதுச்சேரி உட்பட, 11 மாநிலங்களில்உள்ள, 54 மாவட்டங்களில், இன்று முதல் மீண்டும்
அமலாகிறது.
இதனால், பயனாளிகள் சந்தை விலைக்கே, இனி, சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்க நேரிடும். அதற்கான மானியம், அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதாவது, சந்தை விலைக்கும், மானிய விலைக்கும் இடையேயான வேறுபாட்டுத் தொகை, வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 

முதலில் புக்கிங் செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரியானதும், அடுத்த சிலிண்டருக்கான மானியம், முன்பணமாக, பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். நேரடி மானிய திட்டத்தில் ஏற்கனவே சேர்ந்தவர்களுக்கு, அவர்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், தொடர்ந்து, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதில், பிரச்னை எதுவும் இருக்காது.மானியத் தொகை வங்கி கணக்கில் வரவாவதில், பிரச்னை ஏதும் இருந்தால், 'www.mylpg.in' என்ற இணையதளத்தில், தங்களின் புகாரை பதிவு செய்யலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா