இந்திய தபால் துறையை பல்வேறு வகை சேவைகள் தரும் ஒரு அமைப்பாக மாற்ற மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது.நாடெங்கும் மூலை முடுக்கெங்கும் பரந்து விரிந்துள்ள தபால் அலுவலகங்கள் மூலம் புதிதாக
எது போன்ற சேவைகளைத் தர முடியும் என மத்திய அமைச்சகங்களுக்கு
இடையில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தபால்காரர் மூலம் பல்வேறு விதமான சேவைகளுக்கான கட்டண வசூலிப்பு சேவை, தகவல்களை பதிவு செய்வது என பல்வேறு வசதிகளை தபால் அலுவலகம் மூலம் தர அரசு பரிசீலிக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்பவர்களுக்கு பொருட்களை வீடுகளுக்கு வினியோகிக்கும் பணியை மேற்கொள்ள தபால் துறை ஏற்றது என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தபால் அலுவலகங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது குறித்து பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ள சிறப்புக் குழு இந்தாண்டு இறுதியில் தனது பரிந்துரையை அளிக்க உள்ளது.