Skip to main content

தபால்துறையை பல்வேறு சேவை வழங்கும் அமைப்பாக மாற்ற திட்டம்

இந்திய தபால் துறையை பல்வேறு வகை சேவைகள் தரும் ஒரு அமைப்பாக மாற்ற மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது.நாடெங்கும் மூலை முடுக்கெங்கும் பரந்து விரிந்துள்ள தபால் அலுவலகங்கள் மூலம் புதிதாக 

எது போன்ற சேவைகளைத் தர முடியும் என மத்திய அமைச்சகங்களுக்கு
இடையில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தபால்காரர் மூலம் பல்வேறு விதமான சேவைகளுக்கான கட்டண வசூலிப்பு சேவை, தகவல்களை பதிவு செய்வது என பல்வேறு வசதிகளை தபால் அலுவலகம் மூலம் தர அரசு பரிசீலிக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்பவர்களுக்கு பொருட்களை வீடுகளுக்கு வினியோகிக்கும் பணியை மேற்கொள்ள தபால் துறை ஏற்றது என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தபால் அலுவலகங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது குறித்து பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ள சிறப்புக் குழு இந்தாண்டு இறுதியில் தனது பரிந்துரையை அளிக்க உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா