Skip to main content

தபால்துறையை பல்வேறு சேவை வழங்கும் அமைப்பாக மாற்ற திட்டம்

இந்திய தபால் துறையை பல்வேறு வகை சேவைகள் தரும் ஒரு அமைப்பாக மாற்ற மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது.நாடெங்கும் மூலை முடுக்கெங்கும் பரந்து விரிந்துள்ள தபால் அலுவலகங்கள் மூலம் புதிதாக 

எது போன்ற சேவைகளைத் தர முடியும் என மத்திய அமைச்சகங்களுக்கு
இடையில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தபால்காரர் மூலம் பல்வேறு விதமான சேவைகளுக்கான கட்டண வசூலிப்பு சேவை, தகவல்களை பதிவு செய்வது என பல்வேறு வசதிகளை தபால் அலுவலகம் மூலம் தர அரசு பரிசீலிக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்பவர்களுக்கு பொருட்களை வீடுகளுக்கு வினியோகிக்கும் பணியை மேற்கொள்ள தபால் துறை ஏற்றது என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தபால் அலுவலகங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது குறித்து பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ள சிறப்புக் குழு இந்தாண்டு இறுதியில் தனது பரிந்துரையை அளிக்க உள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு