Skip to main content

அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை

அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், எம்.புளியங்குளத்தைச் சேர்ந்த மீனலட்சுமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மனு விவரம்: தமிழகத்தில் அங்கன்வாடிப் பணியாளர்கள், உதவியாளர்களை
நியமிக்க மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெற்று வருகிறது.

2013 ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியான அரசாணை வழிகாட்டுதல்படி மாவட்ட ஆட்சியர்கள், திட்ட அலுவலர்கள் இதற்கான பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்த நேர்காணல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் நடைபெறவில்லை. சில மாவட்டங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். சில மாவட்டங்களில் நேர்காணல் முடிந்துள்ளது.

இந்தப் பணி நியமனம் தொடர்பாக பொது அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

குறிப்பாக, பணியாளர்கள் காலிப் பணியிடம் எண்ணிக்கை, இட ஒதுக்கீடு விவரம் ஆகியவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. பத்திரிகைகள் மூலம் பொது அறிவிப்பு வெளியிட்டு இருந்தால்தான் தகுதியுள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

மேலும், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான் இதற்குத் தகுதியுடையவர்கள் என்பதும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. இந்தப் பணிகளுக்கு யார் யாரை நியமிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முன்கூட்டியே நிர்ணயிப்பதாகத் தெரிகிறது.

எனவே, இட ஒதுக்கீடு முறை, காலிப் பணியிட எண்ணிக்கை போன்ற விவரங்களுடன் கூடிய பொது அறிவிப்பு வெளியிட்டு, அதன் அடிப்படையில் அங்கன்வாடிப் பணியாளர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு, நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அரசாணை 140, 43 ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இடஒதுக்கீடு முறைப்படியே பணியாளர்கள் நியமிக்க இந்த உத்தரவுகள் வகை செய்கின்றன.

ஒரு பணியிடத்துக்கு 10 மடங்கு வீதம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதால் அரசாணை குறித்த தகவல் மக்களைச் சென்றடைந்துள்ளது என்பது உறுதியாகிறது. மேலும், பணிநியமனம் தொடர்பான அரசாணையை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார்.

மேலும், மனுவுக்கு சமூகநலம், சத்துணவுத் திட்டத் துறைச் செயலர், சமூகநலத் துறை ஆணையர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு