மாநில மனித உரிமை ஆணைய தலைவராக மீனாகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பாணை பிறப்பித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மேகாலய
உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான மீனாகுமாரியை மாநில மனித உரிமை ஆணைய தலைவராக பணி நியமனம் செய்ய தமிழக கவர்னர் ரோசய்யா ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் அல்லது 70-வயதை எட்டும் வரை இப்பதவியில் அவர் நீடிப்பார் என்று அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.