Skip to main content

அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி:மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு


அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதிக்கு நடவடிக்கை எடுக்கும்படி, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 5720 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என ஆக.,8 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தமிழகத்தில் 37ஆயிரத்து 2
பள்ளிகள் உள்ளன. 2080 பள்ளிகளில் கழிப்பறைகள் பயனற்ற நிலையில் உள்ளன. கல்வித்துறைக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கும் அரசு, இவற்றை சரி செய்வதில்லை.
திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகளை 6 மாதங்களுக்குள் நிறைவேற்ற 2012 ல் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. நடப்பு ஆண்டில் கல்வித்துறைக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பள்ளிகள் 37 ஆயிரத்து 2. கழிப்பறை இல்லாத பள்ளிகள் 4375, ஆண்கள் பள்ளிகள் 4060. பெண்கள் பள்ளி 898, 1159 ஆண்கள் பள்ளியில் பயனற்ற நிலையில் கழிப்பறைகள் உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிகளை நிறைவேற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர், தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு புகார் செய்தேன். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் செய்துதர உத்தரவிட வேண்டும். பயனற்ற கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி வி.தனபாலன் கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் அழகுமணி ஆஜரானார்.

நீதிபதிகள்:

மனுவை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு தண்ணீர் வசதியுடன் தனித்தனி கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். இதில் மேற்கொண்ட நடவடிக்கை, நிறைவேற்ற தேவையான கால அவகாசம் குறித்து தமிழக அரசு ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இம்மனுவில் கூறப்பட்டுள்ள பள்ளிக் கழிப்பறைகளின் நிலை பற்றி பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும். விசாரணை 6 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு