மத்திய அரசு, மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தில் 60வது தேசிய
மாநாடு நடைபெற்றது. அப்போது அவர், மத்திய அரசு மாணவர்களுக்கு தரமான கல்வியை குறைந்த செலவில் வழங்கும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மத்திய பல்கலைக்கழகம், இந்திய மேலாண்மை நிறுவனங்கள், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் இதர படிப்புகள் குறைந்த கட்டணம் செலுத்தி உயர்கல்வியை பெறுவதற்கான ஆன்லைன் வசதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.