Skip to main content

பேராசிரியரை மாணவர்கள் மதிப்பிடும் முறை: அரசுக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்த ஆலோசனை

தனியார் கல்லூரிகளில் உள்ளதுபோல, பேராசிரியரை மாணவர்கள் மதிப்பிடும் முறையை அரசுக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக மாநில உயர் கல்வித் துறைச் செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா கூறினார்.


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்
மேம்பாட்டு பயிலரங்கம் முதல் முறையாக வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தைத் தொடக்கிவைத்து ஹேமந்த் குமார் சின்ஹா பேசியது:

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் காரணமாக உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. ஆனால் கல்வியின் தரம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

நாட்டில் 751 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றபோதும், அவற்றில் ஒன்றுகூட உலக அளவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பெற முடியவில்லை. இந்த நிலையை மாற்றுவதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசைப் பொருத்தவரை, கல்லூரிகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய -ஸ்மார்ட்- வகுப்பறைகள், கல்வி நிறுவனம் - தொழில் நிறுனங்கள் கூட்டு முயற்சி, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஆசிரியர் - மாணவர் பரிமாற்றும் திட்டம், மொழி மேம்பாட்டு திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. இன்றைய மாணவர்களும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை உடனுக்குடன் கற்று தேர்ச்சியுடன் விளங்குகின்றனர். இதன் காரணமாக ஆசிரியர்களைவிட, அதிகத் தகவல்களை மாணவர்கள் தெரிந்து வைத்துக்கொண்டுள்ளனர்.

ஆனால், பேராசிரியர்களோ 10 ஆண்டுகளாக ஒரே பாடக் குறிப்பை வைத்துக்கொண்டு வகுப்புகள் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கல்வியின் தரம் கேள்விக்குறியாகி வருவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். இந்த நிலை மாற நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஆசிரியர்கள் தங்களை அவ்வப்போது மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்த ஆசிரியரை மாணவர் மதிப்பிடும் முறை பின்பற்றப்படுகிறது. இது இங்குள்ள தனியார் கல்லூரிகள் சிலவற்றில் நடைமுறையில் உள்ளது.

இந்த நடைமுறையை அனைத்து அரசு கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. அவ்வாறு அறிமுகப்படுத்தும் பட்சத்தில் அதனடிப்படையிலேயே, பதவி உயர்வு, ஊக்க ஊதியம் ஆகியவை வழங்கப்படும் என்றார் அவர்.

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன்: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 30 உதவிப் பேராசிரியர்களுக்கு டிசம்பர் 3-ஆம் தேதி வரை 21 நாள்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

மைக்ரோ சாஃப்ட் நிறுவன அதிகாரிகள் மூலம் ஆறு நாள்கள் கம்ப்யூட்டர் பயிற்சிகள் அளிக்கப்படுவதோடு, வரும் 20-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதுமுள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களைக் கொண்டு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின்னர், இணைப்பு கல்லூரிகளுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்காக தமிழகம் முழுவதும் 10 முதல் 15 மையங்கள் அமைக்கப்பட்டு, இப்போது பயிற்சி பெறும் 30 பேராசிரியர்கள் மூலம் இணைப்புக் கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார் ஜி. விஸ்வநாதன்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா