நேஷனல் ஜியாக்ரபிக் இதழும், தொலைக்காட்சி சேனல்களும், அவை தரும் அரிய தகவல்களுக்குப் பெயர் பெற்றவை. நாம் எளிதில் காண முடியாத பலவற்றைப் பற்றி தகவல்களைத் தரும் நேஷனல் ஜியாக்ரபிக் நிறுவனம் விலங்குகள் குறித்து தகவல்களைத் தர http://animals.nationalgeographic.com/animals/
என்ற முகவரியில் ஓர் இணைய தளத்தை இயக்குகிறது. நாம் இதுவரை கேள்விப்படாத விலங்குகள் குறித்தெல்லாம், மிக அருமையான தகவல்களை முழுமையாகத் தருகிறது. இந்த தளம் நம்மை வழி நடத்துவது மிக எளிமையாக உள்ளது. Animals Home, Facts, Photos, Video, Animal Conservation, and Big Cats Initiative எனப் பல பிரிவுகளில், தகவல்கள் கிடைக்கின்றன. மிகப் பெரிய அளவில், விலங்குகளின் பட்டியல் நீள்கிறது. இவை வகைப்படுத்தப்பட்டுள்ளதால், நாம் தேடும் விலங்கு, அல்லது தகவல் சார்ந்த விலங்கினைக் கண்டறிய முடியும். பெரியவர்கள் மட்டுமின்றி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விலங்குகள் குறித்து அறிய மிகவும் அரிய தகவல்களைக் கொண்டுள்ள இந்த தளத்தினை அவசியம் காண வேண்டும்.
கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...